சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கான ஆண்டு விழா. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 25 ஜனவரி, 2025

சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கான ஆண்டு விழா.

1002241996

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 52 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் அனிதா ராதாகிருஷ்ணன், கல்வி நிறுவன இயக்குனர்கள் பிரவீன் வசந்த் ஜெபஸ், அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில் சீர்காழி பாரத ஸ்டேட் வங்கியின்   தலைமை மேலாளர் சத்யபிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 


மேலும் கூட்டுறவு துணைப்பதிவாளர் சாய் நந்தினி கலந்து கொண்டு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்கள், பத்தாம் வகுப்பு, +2 பொதுத் தேர்வில் மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடங்கள் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 


முன்னதாக பள்ளியின் முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றார். துணை முதல்வர் சரோஜா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad