நாகர்கோவில் போக்குவரத்து காவல் - 8 அதிவேக இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது
பதிவெண் பொருத்தாதது, தலைக்கவசம் அணியாதது மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாதது மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டிவந்த 8 அதிவேக இருசக்கர வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.90400 அபராதம் விதிக்கப்பட்டது. வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக