முக்காணி புதுமனை நாடார் தெரு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் வளாகத்தில் வைத்து ம் ஆண்டு 26 பொங்கல் விளையாட்டு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது
இவ்விழா ஊர் தலைவர் ராகவன் தலைமையில் ஆத்தூர் காவல்துறை ஆய்வாளர் மாரியப்பன், ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி பேச்சித்தாய் நாராயணன் DCW நிறுவன அதிகாரி டேனியல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கல்வியில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு காமராஜர் கல்விப்பரிசு மற்றும் ஊக்கத்தொகை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
26ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழாவை ஊர் பொதுமக்கள் கர்மவீரர் காமராஜர் நற்பணி சங்கம் மற்றும் நாடார் இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்தனர்
தமிழக குரல் செய்திகளுக்காக ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக