வேலூர் ,ஜன 21 -
வேலூர் மாவட்டம் தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் மார்ச் 1 முதல்
டாஸ்மாக் கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்படுவதாக ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதை தடுக்க QR Code முறையில் விற்பனை நடைபெறுகிறது. அதிக விலை விற்பனை குறித்து முகாந்திரம் இருந்தால் மட்டுமே ஊழியர்கள் மீது நடவடிக்கை எனவும் கூறியது. இதனையடுத்து, கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் கடை ஊழியர்கள் அனைவரும் சஸ்பெண்ட் என்பதை ஐகோர்ட் உறுதி செய்தது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக