இன்று 20.12.2024 விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட கண்டமங்கலம் மற்றும் ஒலகூர் பகுதிக்குட்பட்ட அடையாள அட்டை பெறாத 250 மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முண்டியம்பாக்கம் மற்றும் திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட அடையாள அட்டை இல்லாத 78 மாற்றுத்திறனாளிகள் நபர்கள் அழைக்கப்பட்டு,116 மாற்றுத் திறனாளிகள் வந்தனர் அவர்களுக்கு மருத்துவ சான்று மற்றும் யுடிஐடி பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி மருத்துவ குழுவுடன் பேச்சு பயிற்சியாளர் திருமதி. அபிசேகா பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் திரு.நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக