பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 ஜூன், 2024

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கர தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போரில்  பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில் பாலஸ்தீன மக்களின் பாதுகாப்பு கூடாரமாக அறிவிக்கப்பட்ட ரஃபா பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு கூடாரத்தின் மீது நள்ளிரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் திடீர் தாக்குதலை நடத்தியது இதில்  குண்டுகள் தரைவழி தாக்குதல் என பல்வேறு தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் கையாண்டு உள்ளது இதில் குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்


இதனை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த குழந்தைகள் போன்று வேடம் அணிந்து உடல் முழுவதும் கட்டுகள் போடப்பட்ட ரத்தம் கசிவது போன்று குழந்தைகள் இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் இறந்த குழந்தைகள் போல துணியில் போற்றப்பட்டது போன்ற பொம்மைகள் செய்யப்பட்டு இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/