தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு இரண்டு நாட்களில் முடிந்துவிடும் ஜூன் நான்காம் தேதி இந்திய கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என தெரிவித்தார். ராஜ்யசபா உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ பேட்டி.
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை திரு வி க நகர் பகுதியில் திமுக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது, அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
குருதி கொடை நிகழ்வில் என் ஆர் இளங்கோ எம்.பி கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து என் ஆர் இளங்கோ பேசியதாவது, திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை குருதிக்கொடை நிகழ்வு நடைபெற்றது. தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று தேர்தல் அறிவித்த பொழுது உறுதி செய்யப்பட்ட ஒன்று. தமிழக முதலமைச்சர் சீரிய ஆட்சியினால் மிகப்பெரிய வெற்றியை தமிழக மக்கள் தருவார்கள் என நம்புகிறோம்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு இரண்டு நாட்களில் முடிந்துவிடும் ஜூன் நான்காம் தேதி இந்திய கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக