மகளிர் சுய உதவி குழு நடத்தி வரும் பெண் லோன் பணத்தை திரும்ப கேட்டதால் பணம் வாங்கியவர் இரும்புராடால் தாக்கி பெண் உயிரிழப்பு, கொலை வழக்காக மாற்றி தாக்கிய நபரை கைது செய்த காசிமேடு போலீசார் மகளிர் சுய உதவிக் குழு மூலம் கடன் வாங்கி நிலுவைத் தொகையை கட்டுமாறு கேட்டதற்கு இரும்பு ராடால் தாக்கப்பட்டு பெண் அரசு ஸ்டாட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகரை சேர்ந்தவர் காயத்ரி வயது (29 )இவருக்கு திருமணம் ஆகி கணவன் மற்றும் 3 ஆண் குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் 24 இவருக்கு மகளிர் சுய உதவி குழு மூலம் ரூபாய் 80 ஆயிரம் லோன் வாங்கி தந்ததாகவும் அந்த பணத்தை கடந்த இரண்டு மாதமாக கட்டாமல் ஏமாற்றி வந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி காயத்ரி போன் மூலம் கேட்டதற்கு அஜித் குமார் காயத்திரியை அடித்து வாய் மற்றும் தலை உடம்பு பகுதியில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்ததால் காசிமேடு போலீசார் அடிதடி வழக்கு கொலை வழக்காக மாற்றி அஜித் குமாரை கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக