ஸ்ரீவைகுண்டம் - அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவர் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 ஜனவரி, 2024

ஸ்ரீவைகுண்டம் - அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், ஜன.23, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய எதிரி கைது.


ஸ்ரீவைகுண்டம் கோவில்பத்து தெருவைச் சேர்ந்த இசக்கி மகன் இசக்கி (29) என்பவர் நேற்று (22.01.2024) மதுபோதையில் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை கல்லால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார்.


இதுகுறித்து மேற்படி அரசு பேருந்தின் ஓட்டுனரான அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த சிவனன் மகன் முருகன் (47) என்பவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் வழக்குபதிவு செய்து எதிரி இசக்கியை கைது செய்தார். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி இசக்கி மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/