காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூரில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து சுமார் ஆறு லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி கஜா (எ) கஜேந்திரன் இன்று பூமி பூஜையினை தொடங்கி வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வண்டலூர் ஊராட்சிக்கு உடப்ட்ட
சார்லு தெருவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.,மழை காலங்களில் மழை நீர் சாலையில் தேங்குவதால் அப்பகுதி மக்களும் பள்ளிக்கு செல்கின்ற மாணவர்களும் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர் மேற்கொண்ட சாலையை புதிதாக அமைத்து தரும்படி காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும் செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் *ரத்தினமங்கலம் எம்.கஜா (எ) கஜேந்திரன் B.A* அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
மக்களின் கோரிக்கைகளை ஏற்று மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து சுமார் 6 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (29.01.2024) நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் காட்டாங்குளத்தூர்வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணா தொழிற்சங்கம் எஸ்.செங்குட்டுவன் மற்றும் கழக கிளை செயலாளர் எஸ் சேகர், மாவீரன், பார்த்திபன், குலசேகரன் ,அருள், கார்த்திகேயன், சதீஷ்குமார், ஸ்ரீ சாய் விக்னேஷ், சஞ்சீவி ,குப்புராஜ், முரளி ,ஜானகி, நாகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக