தூத்துக்குடி மாவட்ட வீராங்கனை தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்வு: அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

தூத்துக்குடி மாவட்ட வீராங்கனை தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்வு: அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து

.com/img/a/

தூத்துக்குடி, ஜன்.28, தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து முதல் பெண்மணியாக தேர்வு செய்யப்பட்ட வீராங்கனை வர்ஷினி அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆசிரியர் காலனியைச் சேர்ந்த வெங்கடசாமி என்பவரின் மகள் வர்ஷினி. இவர் 15 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து முதல் பெண்மணியாக தேர்வு செய்யப்பட்டு சமீபத்தில் ஹரியானா சென்று விளையாடி வந்திருக்கிறார்.


இதனையடுத்து  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனைஅவரது போல்பேட்டை இல்லத்தில் நேற்று சந்தித்து ஆசி பெற்றார். அமைச்சர்  விளையாட்டு வீராங்கனை வர்ஷினியை வாழ்த்தியதுடன்மென்மேலும் பல வெற்றிகளைப் பெற ஊக்கப்படுத்தினார். 


இந்நிகழ்வின் போது விளையாட்டு வீராங்கனை வர்ஷினியுடன் அவரது பயிற்சியாளர் விஜய் உடனிருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad