தூத்துக்குடி - கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 ஜனவரி, 2024

தூத்துக்குடி - கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், ஜன. 23, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த எதிரி கைது.



மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சிவசுப்பு மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் முகிலரசன் மற்றும் போலீசார் நேற்று (22.10.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சின்னமணி நகர் பகுதியில் உள்ள ஒரு கடையின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த சரவணகுமார் மகன் விக்னேஷ் பாண்டி (எ) விக்கிபாண்டி (25) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.



உடனே மேற்படி போலீசார் எதிரி விக்னேஷ் பாண்டி (எ) விக்கிபாண்டியை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி விக்னேஷ் பாண்டி (எ) விக்கிபாண்டி மீது ஏற்கனவே சிப்காட் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/