ஆறுமுகநேரி, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று (31.01.2024) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆறுமுகநேரி நல்லூர் செல்லும் சாலையின் இருபுறமும் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தற்போது 30 ஹெக்டேர் பரப்பளவில் மறு நெல் நடவு செய்யப்பட்டுள்ள பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) சாந்தி ராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின் ராணி, வேளாண்மை துணை இயக்குநர் ஜேங்கின் பிரபாகர், திருச்செந்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கட சுப்பிரமணியன், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக