மத்திய பிரதேசத்தில் சர்ச் மீது காவி கொடியேற்றிய கும்பல்:
மத்திய பிரதேசத்தில் சங்பரிவார் ஆதரவாளர்களின் கும்பல் ஒன்று அங்குள்ள சர்ச் ஒன்றில் புகுந்து காவி கொடியை ஏற்றி உள்ளனர். மத்திய பிரதேசமாநிலத்தின் ஜம்புவா மாவட்டத்தில் உள்ள ராணா பூரி என்ற ஊரில் உள்ள 4 சர்ச்சுகளில் அத்து மீறி உள்ளே நுழைந்து சர்ச்சின் மேலே ஏறி ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டவாரு சிலுவையின் மீது காவிக் கொடியை ஏற்றி உள்ளனர் இச்சம்பவத்தை 50 பேர் கொண்ட சங்பரிவார் ஆதரவு கும்பல் செய்துள்ளது. சிறிது நேரம் கழித்து அக்கும்பல் சென்ற பிறகு கொடிகள் அகற்றப்பட்டுள்ளது. இதே போல் அப்பகுதியில் உள்ள இன்னும் சில சர்ச்சுகளில் அத்துமீறி உள்ளே நுழைந்து ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட வாரு காவி கொடியை கட்டி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக