கோவில்பட்டி - வட்டாட்சியரின் முக்கிய அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 நவம்பர், 2023

கோவில்பட்டி - வட்டாட்சியரின் முக்கிய அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், தனி வட்டாட்சியர் ஆதிதிராவிடர் நலம் மூலம், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் ஒப்புதல் செய்யப்பட்ட லே-அவுட் களில் ஏற்கனவே இலவச வீட்டு மனை ஒப்படை எனப்படும் 'டி நமுனா" பெற்றுள்ளவர்களுக்கு காலி மனை இ-பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


எனவே தங்களிடம் உள்ள டி நமுனா, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எண் செல்லிடப்பேசி எண் மற்றும் தற்போது வசித்து வரும் முழு முகவரியுடன் கூடிய ஒரு மனு ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நிலம் உள்ள கிராம நிர்வாக அலுவலர் வசம் உடன் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட ஒப்படைப் பெற்ற பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் வேறு நபர்கள் மூலம் கொடுத்து விடாமல் நேரடியாக கிராம நிர்வாக அலுவலர் வசம் ஒப்படைத்து பயன் பெறவும்.

(பின்குறிப்பு: கண்டிப்பாக டி நமுனா எனப்படும் ஒப்படை பட்டா வைத்துள்ளவர்கள் மட்டும் மனு கொடுக்கவும்)


மேலும், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மேற்கண்ட துறை சார்ந்த காகித பட்டாக்களை மற்றும் வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள காகித பட்டாக்களை கம்ப்யூட்டர் பட்டாக்களாக மாற்றி வழங்குவதற்கு அசல் பயனாளிகள் மனு செய்ய கோரப்பட்டுள்ளது.

இது தவிர எந்த பட்டாக்களும் புதிதாக வழங்கப்படுவதில்லை எனவே இடைத்தரகர்களை புதிதாக பட்டா தர போகிறார்கள் என்று சொல்லுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/