செங்கல்பட்டு மாவட்ட ஓட்டல்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்துடன் இணைந்து மாமண்டூர் சிக்னல் அருகில் புதியதாக ஜூனியர் குப்பண்ணா உணவகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த உணவகத் திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்,மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ க.சுந்தர், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் பொறி. S.ஜெகதீசன், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் ஆ.கோபண்ணா, மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்களுடன் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஹோட்டல் சங்கம் மாநில தலைவர் மு.வெங்கடசுப்பு, மாநில பொருளாளர் பி.ஜி.ஆர்.கணேசன், மாநில செயலாளர் ஆர்.சீனிவாசன், மற்றும் மாவட்ட தலைவர்கள் எம்.ஜனார்தனம், எஸ்.ஆர்.இளங்கோவன், பி.முத்தமிழன், கே. பாண்டியன், சி.என்.எஸ் ஜெயசிம்மன், டி. ஆனந்தன் மற்றும் அனைத்து மாவட்ட நகர ஹோட்டல் சங்கம் நிர்வாகிகள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக