தூத்துக்குடி - மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை - வானிலை மையம் எச்சரிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 நவம்பர், 2023

தூத்துக்குடி - மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை - வானிலை மையம் எச்சரிக்கை.

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து. இந்த மழை நேற்று இரவு வரை தொடர்ந்தது.  வானிலை மையம் எச்சரிக்கை காரணமாக இன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.


இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இனிகோ  நகர், புதிய துறைமுகம் ஆகிய மீனவ கிராமங்களில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள்  மற்றும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி  தொழிலுக்கு செல்லவில்லை. 


265 விசைப் படகுகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/