தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி கூட்ட அரங்கில் நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் நகராட்சி ஆணையாளர் கமலா முன்னிலையில் சாதாரண கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இனாம் மணியாச்சி, மூப்பன்பட்டி , இலுப்பையூரணி, திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், மந்திதோப்பு, நாலாட்டின் புதூர் உள்ளிட்ட 7 ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சி உடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால் நகராட்சிக்கு கிடைக்க பெரும் சாலை, கழிவு நீர் மேலாண்மை, தெரு விளக்கு, பூங்கா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தற்போது இணைக்க பட்டுள்ள 7 ஊராட்சிகளுக்கும் கிடைக்கும், மேலும் அப்பகுதியின் மதிப்பும் உயரும் என எதிர்பார்க்க படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக