தூத்துக்குடி - குண்டர் தடுப்பு சட்டத்தில் 4 பேர் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 17 நவம்பர், 2023

தூத்துக்குடி - குண்டர் தடுப்பு சட்டத்தில் 4 பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 4 பேர் நேற்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - இந்த ஆண்டு இதுவரை 154 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கோ. லட்சுமிபதி நடவடிக்கை.


கடந்த 17.10.2023 அன்று மாசாப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெம்பூர் பகுதியைச் சேர்ந்த வேதமுத்து மகன் வேல்முருகன் (24) என்ற ராணுவ வீரரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் வெம்பூர் நடுத்தெருவைச் சேர்ந்த ஆயிரராமன் (எ) நரிகவுண்டர் மகன் மாரிச்சாமி (28) என்பவரை மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி மாரிச்சாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மாவட்ட காவல்துறை அதிகாரக்கு தகவல் அனுப்பினார்.



கடந்த 21.10.2023 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடிவைத்தானேந்தல் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் ஆறுமுகநேரி காமராஜர் புரத்தைச் சேர்ந்த திலகர் மகன் அலெக்ஸ்ரூபன் (19), ஆறுமுகநேரி முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சித்திரைபாண்டி மகன் முத்துராஜ் (22) மற்றும் ஆறுமுகநேரி பாரதி நகரை சேர்ந்த பில்லேந்திரன் மகன் பாலமுருகன் (20) ஆகியோரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்து, அவர்களிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். 


 மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான அலெக்ஸ்ரூபன், முத்துராஜ் மற்றும் பாலமுருகன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி அவர்களும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.


மேற்படி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.


அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கோ. லட்சுமிபதி வெம்பூர் நடுத்தெருவைச் சேர்ந்த ஆயிரராமன் (எ) நரிகவுண்டர் மகன் 1) மாரிச்சாமி, ஆறுமுகநேரி காமராஜபுரத்தைச் சேர்ந்த திலகர் மகன் 2) அலெக்ஸ்ரூபன், ஆறுமுகநேரி முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சித்திரைபாண்டி மகன் 3) முத்துராஜ் மற்றும் ஆறுமுகநேரி பாரதி நகரை சேர்ந்த பில்லேந்திரன் மகன் 4) பாலமுருகன் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 28 எதிரிகள் உட்பட 154 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/