திருச்செந்தூர் - கந்த சஷ்டி சூரசம்ஹார நாளை முன்னிட்டு சுற்றுப்புறத்தில் உள்ள 4 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் ஆணை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 17 நவம்பர், 2023

திருச்செந்தூர் - கந்த சஷ்டி சூரசம்ஹார நாளை முன்னிட்டு சுற்றுப்புறத்தில் உள்ள 4 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் ஆணை.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் மற்றும் நகரம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவில் சிகர நிகழ்வான சூரசம்ஹாரத்தை  முன்னிட்டு 18.11.2023 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (1)-ன்படி திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 4 (நான்கு) மதுபானக் கடைகள் மட்டும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் அன்றைய தினம் மதுபான விற்பனை எதுவும் நடைபெறக் கூடாது.


மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.                                                             


கடை எண் 9991 அடைக்கலாபுரம் பகுதி, ஆறுமுகநேரி மெயின் ரோடு, வீரபாண்டியன்பட்டணம், திருச்செந்தூர்.

கடை எண் 10149 சங்கிவிளை, பரமன்குறிச்சி சாலை, திருச்செந்தூர். 

கடை எண் 10153 பாளையங்கோட்டை ரோடு, திருச்செந்தூர்.

கடை எண் 10154 குலசை மெயின்ரோடு, திருச்செந்தூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/