தூத்துக்குடி மாவட்டத்திற்கு 18-ந்தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் லட்சுமிபதி அறிவிப்பு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 நவம்பர், 2023

தூத்துக்குடி மாவட்டத்திற்கு 18-ந்தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் லட்சுமிபதி அறிவிப்பு

.com/img/a/

திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது. அவற்றில் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழாவாகும். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.


இந்நிலையில் வருகிற 18-ந் தேதி கந்த சஷ்டி திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.


எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தாது. இது செலாவணி முறி சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது.


இந்த விடுமுறைக்கு பதிலாக அடுத்த மாதம் 9-ந் தேதி (சனிக்கிழமை) மாற்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad