தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் வரும் 26ம் தேதி கிழிந்த அழுக்கடைந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றும் முகாம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி விளாத்திகுளம் கிளை சார்பில் விளாத்திகுளம் எட்டையாபுரம் ரோட்டில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வருகிற 26ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாணய திருவிழா மற்றும் கிழிந்த அழுக்கடைந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் முகாம் நடைபெறுகிறது.
இதில் விளாத்திகுளம் புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுமாறு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக