கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் கல்லூரியில் பராசக்தி ஆலயம் உள்ளது. இதை விரிவுபடுத்தி மண்டபமாக கட்டி முடிக்கப்பட்டது. இந்த மண்டபத்தை முன்னால் மாணவரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி. செல்வகுமார் திறந்து வைத்தார்.
அதன் பின் கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர் பெருமக்களின் நவராத்திரி மெகா கொலுவை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அன்னதான நிகழ்வையும் தொடங்கி வைத்தார். இவ்விழாவில், கல்லூரி செயலாளர் C.ராஜன், பொருளாளர் S.R.சுப்பிரமணியன், துணைத் தலைவர் சந்திரமோகன், துரைச்சாமி, சிவகுமார், கல்வி கழக தலைவர் K.S.மணி, முன்னாள் மாணவர் சங்க தலைவர் பசுபதி, ஆதி மகாலிங்கம், P.V.ஆனந்த், கல்லூரி முதல்வர் C.ராஜசேகர், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக