மாசார்பட்டி - இராணுவ வீரர் கொலை சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் எச்சரிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 அக்டோபர், 2023

மாசார்பட்டி - இராணுவ வீரர் கொலை சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் எச்சரிக்கை.

தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெம்பூர் காலனியைச் சேர்ந்த வேதமுத்து மகன் வேல்முருகன் (24) என்ற இராணுவ வீரர் கொலையுண்டுள்ளார். இது சம்மந்தமாக மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய புலன் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இந்த கொலை வழக்கு சம்மந்தமாக உண்மைக்கு புறம்பான செய்திகளையோ, வீடியோ, ஆடியோ போன்றவற்றை வாட்ஸ் ஆப் குழுக்கள், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் யாரும் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.


வழக்கின் புலன் விசாரணையை பாதிக்கின்ற வகையில் சட்டத்தை மீறி உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/