படப்பை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக சார்பில் இரண்டு ஆண்டு சாதனைகளை முடித்து மூன்றாவது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆயுத பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 25 அக்டோபர், 2023

படப்பை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக சார்பில் இரண்டு ஆண்டு சாதனைகளை முடித்து மூன்றாவது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆயுத பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக சார்பில் இரண்டு ஆண்டு சாதனைகளை முடித்து மூன்றாவது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆயுத பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.


காஞ்சி மாவட்ட குழு பெருந்தலைவர் படப்பை மனோகரன், மற்றும் குன்றத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சரஸ்வதி மனோகரன், ஆலோசனைப்படி, படப்பை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக கழக சார்பில் மூன்றாவது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆயுத பூஜை நிகழ்ச்சி படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன் தலைமையில் நடைபெற்றது. 


இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏடிஎம் .வினோத், மற்றும் படப்பை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர், ஊராட்சி மன்ற பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/