வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் சாய்சரத் (வயது 26) வேடசந்தூர் அருகே உள்ள சாய்கார்ஸ் ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மது போதையில் இருந்த சாய்சரத் கலாட்டா செய்து கொண்டு இருந்துள்ளார். அதனால் அவரது தந்தை ஆறுமுகம் அவரை ஒரு வீட்டில் உள்ளே வைத்து வெளியில் பூட்டி விட்டார். இதனால் வீட்டின் ஓட்டை பிரித்து வெளியே வரலாம் என்று நினைத்த சாய்சரத் வீட்டின் மேலே ஏறி உள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த சாய் சரத்திற்கு பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . இதில் சாய்சரத் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவம் குறித்து வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சப் இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன் வேல்ராஜ் ஆகியோர் சாய்சரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் வேடசந்தூர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக