திருப்பரங்குன்றம் கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடந்தது. அனைவருக்கும் கதம்ப சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 அக்டோபர், 2023

திருப்பரங்குன்றம் கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடந்தது. அனைவருக்கும் கதம்ப சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுள் முதல்படை வீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏரா ளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.


குறிப்பாக வைகாசி விசா கத் திருவிழா, கந்தசஷ்டி விழா, பங்குனி திருவிழா உள்ளிட்ட திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள். இதில் மலை மேல் வேல் எடுக்கும் திரு விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.


அதாவது கிராம மக்கள் சார்பில் விவசாயம் செழிக்க வேண்டியும், நக்கீரர் சாப விமோசனத்தை நினைவு கூறும் வகையிலும் கொண் டாடப்படும் திருவிழாவா கும். ஒவ்வொரு புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கி ழமை மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா நடை பெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று நடைபெற்றது.


இதற்காக திருப்பரங்குன் றம் கோவில் மூலஸ்தானத் தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் உள்ள தங்க வேலுக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு, அலங்கரித்து பல்லக் கில் வைத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வேல் மலை மேல் உள்ள காசி விஸ்வநா தர் கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர் தீர்த்தத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


இதனையடுத்து மலைக்கு கீழ் உள்ள பழனியாண்டவர் சன்னதிக்கு வேல் கொண்டு வரப்பட்டு, அங்கு பழனி யாண்டவருக்கு சிறப்பு அபி ஷே கங்கள், அலங்காரங் கள் நடைபெற்றது, அங்கு வேலுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட  அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/