ஆக்கிரமிப்பாளர்களிடம் கையூட்டு பெற்று வரும் வாலாஜா நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொறுப்பாளரை பணியிட மாற்றம் செய்ய பாரத ஜனதா கட்சி பிரமுகர் ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 அக்டோபர், 2023

ஆக்கிரமிப்பாளர்களிடம் கையூட்டு பெற்று வரும் வாலாஜா நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொறுப்பாளரை பணியிட மாற்றம் செய்ய பாரத ஜனதா கட்சி பிரமுகர் ஆட்சியரிடம் மனு.

இராணிப்பேட்டை மாவட்டம்  பாரதி ஜனதா கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் மா.சதீஷ்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனு அளித்தார் அந்த மனுவில்  வாலாஜாபேட்டை இந்திரா நகர் பகுதியை  சேர்ந்தவர் துரைசாமி என்பவரின் மகன் டி.விநாயகன் இவர்  நகராட்சியில்  துப்புரவு  மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.



தற்போது சுகாதார ஆய்வாளர் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்  இந்த நிலையில் வாலாஜா  பேருந்து நிலையம்  சுற்றியுள்ள  கழிவுநீர்  கால்வாய்களை ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வரும்  ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை  எடுக்க புகார் மனு அளித்தால்  அந்த மனுவை விநாயகம் கால்வாயை ஆக்கிரமித்து  கடைகள் வைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளிடமே கொடுத்து  அவர்களிடம் மாதா, மாதம்  கையூட்டு பெற்று வருகிறார் விநாயகத்தின் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி கமிஷனர் மற்றும் ஆர்.டி.எம் போன்ற உயர் அதிகாரியிடம் புகார் கொடுத்தால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


எனவே இவர் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இவரை பணி மாற்றம் செய்ய வேண்டும்மென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/