திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் கடத்த பட்ட குழந்தை வழக்கு! தனிப்படை போலீஸ் தீவிர விசாரணை! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 அக்டோபர், 2023

திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் கடத்த பட்ட குழந்தை வழக்கு! தனிப்படை போலீஸ் தீவிர விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் 1½ வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ்-ரதி தம்பதியின் 1½ வயது ஆண் குழந்தை ஸ்ரீஹரிஸ். முத்துராஜ் தனது குடும்பத்துடன் கடந்த 5-ந் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். கோவில் வளாகத்தில் வைத்து குழந்தையை 40 வயது மதிக்கத்தக்க பெண் கடத்தி சென்றார். 


இதுகுறித்து ரதி கொடுத்த புகாரின் பேரில் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் 4 தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் அந்த பெண்ணை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். விரைவில் குழந்தை மீட்கப்படும் என காவல் துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/