குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குற்றத்தடுப்பு மற்றும் நிர்வாக சீரமைப்பு தொடர்பான கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் அமைச்சர்கள், அனைத்துமாவட்ட கலெக்டர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்டங்களில் நடந்து வரும் நிர்வாக திறன், குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன, வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் பற்றி விவாதிக்கப்பட்டது.மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது கொலை, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் குமரி மாவட்டத்தில் மிக, மிக குறைவாக உள்ளது என அரசு தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் குமரி மாவட்டத்தில் அதிகமாக நடைபெறும் 3 குற்றச்சம்பவங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
அதாவது முதலில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி, இரண்டாவதாக நில மோசடி மற்றும் 3-வதாக குடும்ப பிரச்சினை மற்றும் வரதட்சணை கொடுமைகள் ஆகும். அவற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வேலை வாங்கி தருவதாக நடைபெறும் மோசடியை தடுக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒட்டப்படும் விளம்பர சுவரொட்டிகள், ஆன்லைன் விளம்பரங்கள் ஆகியவற்றில் உள்ள விவரங்கள் சேகரித்து அது உண்மையா?, போலியான நிறுவனங்களா? என கண்காணிக்க மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 சிறப்பு தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
உதாரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வடசேரியில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் தனியார் வேலை வாய்ப்பு வழங்கும் முகாம் ஒன்று நடந்தது. உடனே தகவல் அறிந்துஅறிந்த தனிப்படையினர் இதுபற்றி விசாரணை நடத்த ஓட்டலுக்கு சென்றனர். ஆனால் போலீசார் செல்வதற்குள் முகாம் நடத்துபவர்கள் தப்பி சென்றனர். இதன்மூலம் 12 பேரிடம் இருந்து பணமோசடி தடுக்கப்பட்டது.2-வதாக நில மோசடியை தடுக்க ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு முறை வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, கிராம நிா்வாக அதிகாரிகள், பத்திரப்பதிவு துறை, போலீஸ் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மூலம் நிலமோசடி சம்பந்தமாக உடனே தீர்வு காண சம்பந்தப்பட்ட புகார்கள் குறித்து அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை நடத்தி தீர்வு காணப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக