ஆண்டிபட்டியில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 அக்டோபர், 2023

ஆண்டிபட்டியில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 145 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி நகர திராவிட கழகம் சார்பில் 22 வது ஆண்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.


முகாமிற்கு மாவட்ட தலைவர் சுருளி ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் கண்ணன் வரவேற்று பேசினார் .ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முகாமை துவக்கி வைத்து வாழ்த்து பேசினார். பெண்கள் முகாமை இந்தியன் வங்கி மேலாளர் சுந்தரராஜ பெருமாள் துவக்கி வைத்தார். முகாமில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், ஆண்டிபட்டி பேரூராட்சி சேர்மன் சந்திரகலா, முன்னாள் சேர்மன் ஆ.ராமசாமி, கவுன்சிலர் சரவணன், பேரூர் செயலாளர் பூஞ்சோலை சரவணன், தொழிலதிபர் சேட் பரமேஸ்வரன் மற்றும்  அருணாசலம், நோபிள் மணிகண்டன், ஆண்டிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.


தேவாரம் இளைய ஜமீன்தார் விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முகாமில் விவேக், ஜீவா, மதுரை கார்த்திக், பால்பாண்டி ஜெயபால் கலந்து கொண்டனர். முதல் ரத்தம் வழங்கி தனுஷ் முகாமை துவக்க வைத்தார். முகாமில் மருத்துவர்கள் ஜெய்கணேஷ் மற்றும் ராஜ்குமார் தனது துணைவியாருடன்  ரத்தம் வழங்கினார்கள்.


தொடர்ந்து 22 ஆண்டுகளாக ரத்தம் வழங்கி வரும் உசிலை ஈகிள் டெய்லர் ஐயர் மற்றும் கம்பம் எல்ஐசி முகவர் பரமன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். ரத்தம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது .முகாமை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் பிரியா குழுவினருடன் ரத்தம் சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை  நகர திராவிடர் கழகம் சார்பில் ஸ்டார் நாகராஜ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/