ஏரல் மற்றும் குரும்பூர் இடையே அமைந்துள்ள இராஜபதி அருள்மிகு சௌந்தர்ய நாயகி அம்மன் சமேத அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில், ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை (அக்.8) சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
நவகைலாயத் திருத்தலமும் கேது ஸ்தலமுமான இத் திருக்கோயிலில், ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை அருள்மிகு நாகநாதர் மற்றும் அருள்மிகு கேதீஸ்வரருக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக