திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு!

.com/img/a/

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு உள் பிரகாரத்தில் பக்தர்கள் வழிபடும் வகையில் கொலு வைக்கப்பட்டுள்ளது.


இந்துக்களின் பண்டிகையில் மிகவும் முக்கியமான பண்டிகையாக புரட்டாசி மாதத்தில் வரும் சரண் நவராத்திரி திருவிழா 10 நாட்களும் அம்மனுக்கு உகந்த நாட்களாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா நட்பு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை போற்றும் விதமாகவும் உள்ளது. நவராத்திரியை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளில் விரதமிருந்து தெய்வங்கள், மனிதன், மற்ற உயிரினங்கள் ஆகியவற்றை களிமண்ணாலான பொம்மைகளாக கொலுவாக அடுக்கி வைத்து நாள்தோறும் பூஜை செய்வது ஆண்டாண்டு காலமாக வழக்கத்தில் உள்ளது.


அதே போல கோயில்களிலும் கொலு வைக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்தாண்டு நவராத்திரி ஞாயிற்றுக்கிழமை (இன்று) தொடங்கி வருகின்ற அக். 23-ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் 24-ஆம் தேதி விஜயதசமி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள் இரண்டாம் பிரகாரத்தில் 5 அடுக்குகளாக அருகருகே 5 இடங்களில் வண்ண வண்ண பொம்மைகளால் கொலு வைக்கப்பட்டுள்ளது. 


இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வண்ணமயமான புதிய பொம்மைகள் இடம்பெற்றுள்ளது. மேலும் 108 மகாதேவர் சன்னிதி முன்பு தெப்பம் வைத்து முளைப்பாரியும் வளர்க்கப்படுகிறது. பக்தர்கள் கொலுவை பார்த்து வழிபடும் வகையில் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் இரா.அருள்முருகன், திருக்கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக், அறங்காவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad