30 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்ட கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 அக்டோபர், 2023

30 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்ட கோரிக்கை.

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அருகே தேவன்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மேலத் தெருவில் அதிக அளவில் மக்கள்  வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் குடியிருப்புகள் அருகிலும் மற்றும் வயல்வெளிப் பகுதிக்கு செல்லும் வழியிலும் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இன்னமும் பயன்பாடில்லாத நிலையில்தான் உள்ளது.


இது ஆண்டுகள் பல கடந்து விட்டதால் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிற காரணத்தால்  இந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைத்துத்தர வேண்டும் என தேவன்குடி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/