கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் மின்னாம்பள்ளி கிராமத்தில் அமைந்து உள்ள அருள்மிகு குளக்கரை வன்னியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் நிகழ்வாக 26.10.2023 வியாழக்கிழமை இரவு சின்னகரசப்பாளையம் கொங்கு ஒயிலாட்ட குழுவினர் நடத்திய கொங்கு ஒயிலாட்டம் ஶ்ரீ ஈசன் வள்ளி கும்மி விழா நடந்தது. இதில் பல ஊர்களில் இருந்து 2500 மேற்பட்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வானது டிஸ்கவர் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது ஒரே நேரத்தில் அதிக நபர்கள் இணைந்து ஒயிலாட்டம் ஶ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஆட்டம் நடந்ததை பதிவு செய்து அதற்கான சான்றிதழை ஶ்ரீ வன்னியம்மன் சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் கொங்கு ஒயிலாட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜி பழனிவேல் அவர்களிடம் வழங்கினார். தொடர்ந்து முருகன் வள்ளியின் சரித்திரம் மற்றும் கொங்கு நாட்டு தெய்வங்களின் பாடலை பாடி விழாவானது பல மணி நேரம் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக