அலங்காநல்லூரில் அதிமுக (ஓபிஎஸ் அணி) பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

அலங்காநல்லூரில் அதிமுக (ஓபிஎஸ் அணி) பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை தனியார் மண்டபத்தில், அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 


இதற்கு, அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் சேது சீனிவாசன் தலைமை தாங்கினார். அலங்காநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சின்னபாண்டி, பேரூர் செயலாளர்கள் சேகர், வெள்ளை கெங்கை, ராமசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோதிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 
மாவட்ட அவைத் தலைவர் தனபாலன் வரவேற்றார். மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர் முருகேசன், தொண்டர்கள் முன்னிலையில் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், விரைவில் அதிமுக என்ற கட்சி முழுவதும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வசம் வரும். பணத்தால் கட்சியை விலைக்கு வாங்க முடியும், ஆனால் உண்மையான தொண்டர்களை ஒரு போதும் எடப்பாடி பழனிச்சாமியால் விலைக்கு வாங்க முடியாது. 


உண்மை தொண்டர்கள் அனைவரும் ஓ.பி.எஸ் வசம் உள்ளனர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நமது கட்சியின் வேட்பாளரை பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய தொண்டகள் அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் திரவியம் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/