கன்னியாகுமரி கடற்கரையில் 6000 பனை விதைகள் நடும் பணி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 அக்டோபர், 2023

கன்னியாகுமரி கடற்கரையில் 6000 பனை விதைகள் நடும் பணி.

தமிழ்நாட்டில் கடலோர பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் 1071 கிலோ மீட்டர் தூர கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி இன்று நடைபெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கன்னியாகுமரி சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதியில் 6000 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி இன்று நடந்தது.மேயர் ஆர். மகேஷ் தொடங்கி வைத்தார். 


கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயக்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆறுமுகம், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 


இதில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு கடற்கரை ஓரமாக பனை விதைகளை விதைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/