நெல்லிக்குப்பத்தில் அதிமுக 52வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 அக்டோபர், 2023

நெல்லிக்குப்பத்தில் அதிமுக 52வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52வது ஆண்டு  தொடக்க விழா பொதுக்கூட்டம் நெல்லிக்குப்பம் ஊராட்சியில் திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.குட்டி (எ) நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. 

மேலும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ். ஆறுமுகம் முன்னிலையில் எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் மற்றும் நெல்லிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவருமான என். சி. பாஸ்கர் (எ) பார்த்தசாரதி, ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், திரைப்படப் பாடகி தலைமைக் கழக பேச்சாளர் டி.கே.கலா, கழக மகளிர் அணி இணைச் செயலாளர் மற்றும் கழக செயற்குழு உறுப்பினர் கே.மரகத குமரவேல், ஆகியோர் கலந்து கொண்டனர். 


மேலும் இந்நிகழ்வில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் தையூர்  ஊராட்சி மன்ற தலைவர் தையூர் எஸ். குமரவேல், திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜி. ராகவன், திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.செல்வம், திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.விஜயஅரங்கன், மற்றும் அனைத்து உலகை எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தண்டரை கே.மனோகரன், மாவட்ட அவைத் தலைவர் எம்.தனபால், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் நாவலூர் முத்து,மற்றும் தலைமை கழக பேச்சாளர் அ.கு.பாலன், திருப்போரூர் வடக்கு ஒன்றிய மகளிர் அணி இணை செயலாளர் டி. தாட்சாயனி தனசேகரன், மாவட்ட இணை செயலாளர் லீலாவதி அகோரம், திருப்போரூர் தெற்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் ஜி.தனபால் எம்டிசி, நெல்லிக்குப்பம் கிளை செயலாளர் டி.நந்தகுமாரன், நெல்லிக்குப்பம் கிளைக் செயலாளர் ஜெயக்குமார், ஆகியோர் பங்கேற்றனர். 


மேலும் இதில் நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் மகளிர் அணி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/