திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கே.எஸ்.ரவிச்சந்திரன், புட்லூர் ஆர்.சந்திரசேகர், கே.ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஏ.தயாளன், எம்.குழந்தைவேலு, பி.அமுதாபொன்பழனி, எம்.சுரேந்திரன், ஜெ.நரேஷ்பாபா, மேரிஏகாம்பம, பொன்பழனி, வெங்கல் வி.கே.லிங்கன், எஸ்.மனோகரன், ஜெ.வெங்கடேசன், ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
அதிமுக அமைப்புச் செயலாளரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரமான பா.பென்ஜமின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், இந்த நிகழ்ச்சியில் அதிமுக இலக்கிய அணி துணைச் செயலாளரும் தலைமை கழக பேச்சாளருமான டாக்டர் நிர்மலா அருள்பிரகாஷ், திரைப்பட நடிகரும் தலைமை கழக பேச்சாளருமான ஜெயமணியன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர், முன்னாள் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினரும் பூவிருந்தவல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான என்.எஸ்.ஏ.இரா.மணிமாறன், மாவட்ட அவைத்தலைவர் தி.பகண்ணன், மாவட்ட துணை செயலாளர் கா.சு.ஜனார்த்தனம், மாவட்ட பொருளாளர் சி.ஒய்.ஜாவித் அகமது, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் காட்டுப்பாக்கம் ஜி.திருநாவுக்கரசு, எல்லாபுரம் மேற்கு துணை செயலாளர் கோடுவெளிஒன்றிய குழு உறுப்பினர் எம்.குழந்தைவேலு அமைப்புச் செயலாளரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் அவர்களுக்கு சால்வை அணிவித்து மலர் சென்டு கொடுத்து வீரவாள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட பொருளாளர் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி (EX) எ.என்.திருவேங்கடம் நன்றியுரை ஆற்றினார்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக