ஆழ்வார்திருநகரி, மக்கள் மனங்களில் என்றும் வாழும் கடவுள் எம்ஜிஆர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழிகளில் கழகத்தை வழி நடத்தும் மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணையின்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் பி சண்முகநாதன் ஆலோசனையின் பேரிலும் கழக 52 ஆம் ஆண்டு துவக்க விழா கொடியேற்றும் நிகழ்ச்சி ஆழ்வார்திருநகரி பேரூராட்சி சார்பில் நகரக் கழகச் செயலாளர் எஸ்.செந்தில் ராஜகுமார் தலைமையில் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஒளிப் படத்திற்கு மாலை அணிவித்து கழகக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் நகர கழக அவைத் தலைவர் எம் ஜி ஆர் பக்தன் இராஜப்பா வெங்கடாச்சாரி முன்னிலையில் செயலாளர் S செந்தில் ராஜகுமார் கொடியேற்றிவைத்து இனிப்பு வழங்கினார். கேடிசி பெரியசாமி அம்மா பேரவை செயலாளர் சிவசுப்பிரமணியன் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேலுச்சாமி நகரத் துணைச் செயலாளர் விஸ்வநாதன் இளைஞரணி செயலாளர் லட்சுமணன் சம்பத் ஆறுமுகம் பரமசிவன் எம்ஜிஆர் மன்ற செயலாளர் மரிய அடைக்கலம் அப்பாஸ் மரைக்காயர் சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்புராஜ் விவசாய பிரிவு செயலாளர் ஆனந்த பூபதி ஆனந்த வெங்கடாச்சாரி உட்பட திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக