கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் அய்யர்மலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு கிராமப்புற/நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெரிகாட்டுதல் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 28.10.2023 சனிக்கிழமை காலை 8மணி முதல் மதியம் 3 வரை நடைபெறுகிறது.
இதில் 200 மேற்பட்ட நிறுவனங்கள் 10000 மேற்பட்ட காலி பணியிடத்தை நிரப்ப உள்ளனர் மேலும் அயல்நாட்டு நிறுவன பணிக்கு வழிகாட்டுதல்,இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற உள்ளது.
8 ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ,நர்சிங், பார்மசி, டெய்லரிங், பொறியியல் படித்தவர்கள் பங்கு பெறலாம். மாற்றுத்திறனாளிகளும் பங்கு பெறலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்
https://forms.gle/SdFqaHwYDG9YsUwQ8 Google Link - ல் அல்லது QR CODE ஐ ஸ்கேன் செய்து பதிவு செய்து அறிந்துகொள்ளவும், பதிவுசெய்யவும்
கொள்ளலாம்.
தனியார்துறை வேலைவாய்ப்புகள் குறித்து
தொடர்ந்து அறிந்துகொள்ள
https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவுசெய்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக