குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 28.10.2023 அன்று நடைபெற உள்ளது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 அக்டோபர், 2023

குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 28.10.2023 அன்று நடைபெற உள்ளது.


கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் அய்யர்மலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு கிராமப்புற/நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெரிகாட்டுதல் மையம் இணைந்து நடத்தும்  மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 28.10.2023 சனிக்கிழமை காலை 8மணி முதல் மதியம் 3 வரை  நடைபெறுகிறது.


இதில் 200 மேற்பட்ட நிறுவனங்கள் 10000 மேற்பட்ட காலி பணியிடத்தை நிரப்ப உள்ளனர் மேலும் அயல்நாட்டு நிறுவன பணிக்கு வழிகாட்டுதல்,இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற உள்ளது. 


8 ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ,நர்சிங், பார்மசி, டெய்லரிங், பொறியியல் படித்தவர்கள் பங்கு பெறலாம். மாற்றுத்திறனாளிகளும் பங்கு பெறலாம்.



இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்


https://forms.gle/SdFqaHwYDG9YsUwQ8 Google Link - ல் அல்லது QR CODE ஐ ஸ்கேன் செய்து பதிவு செய்து அறிந்துகொள்ளவும், பதிவுசெய்யவும்

கொள்ளலாம்.


 தனியார்துறை வேலைவாய்ப்புகள் குறித்து

தொடர்ந்து அறிந்துகொள்ள 

https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவுசெய்து கொள்ளலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/