கயத்தாறு - அனுமதியின்றி சரள் மணல் திருடிய 2 பேர் கைது - 3 யூனிட் சரள் மணல், லாரி மற்றும் ஜேசிபி பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 அக்டோபர், 2023

கயத்தாறு - அனுமதியின்றி சரள் மணல் திருடிய 2 பேர் கைது - 3 யூனிட் சரள் மணல், லாரி மற்றும் ஜேசிபி பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் அனுமதியின்றி சரள் மணல் திருடிய 2 எதிரிகள் கைது - 3 யூனிட் சரள் மணல் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட  லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம் பறிமுதல்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப் மற்றும்  போலீசார் நேற்று (26.10.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தாறு பகுதியில் உள்ள தவிடு தாங்கி கண்மாய் பகுதியில் கயத்தாறு வெள்ளாளன் கோட்டை பகுதியை சேர்ந்த பாலையா மகன் கிருஷ்ணசாமி (38) மற்றும் கயத்தாறு அகிலாண்டபுரம் பகுதியை சேர்ந்த கோமதிபாண்டியன் மகன்  முத்துப்பாண்டி (33) மற்றும் சிலர் சேர்ந்து சட்டவிரோதமாக அனுமதியின்றி ஜேசிபி இயந்திரம் மூலம் லாரியில் சரள் மணல் திருடியது தெரியவந்தது.


உடனே மேற்படி போலீசார் எதிரிகளான கிருஷ்ணசாமி மற்றும் முத்துப்பாண்டி ஆகிய 2 பேரையும் கைது செய்து, திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரி, ஜேசிபி இயந்திரம் மற்றும்  3 யூனிட் சரள் மணலையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/