மாடப்பள்ளி ஊராட்சி பேட்டையான் வட்டத்தில் புதியமின்மாற்றியை திறந்து வைத்த A நல்லதம்பி MLA. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 செப்டம்பர், 2023

மாடப்பள்ளி ஊராட்சி பேட்டையான் வட்டத்தில் புதியமின்மாற்றியை திறந்து வைத்த A நல்லதம்பி MLA.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாடப்பள்ளி ஊராட்சி பேட்டையான் வட்டம் மற்றும் 55 குடும்பம் கிராம மக்கள் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இதனை சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

மக்களின் கோரிக்கை ஏற்று, மடவாளம் பிரிவிற்கு உட்பட்ட 11KV குரிசிலாப்பட்டு பீடரில் இருந்து, புதிய மின்மாற்றி மாடப்பள்ளி பகிர்மானத்திற்கு Rs.4,17,110/- மதிப்பீட்டில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் A நல்லதம்பி MLA அவர்களால் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் அரசு சார்பில் மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம், செயற்பொறியாளர் அருள் பாண்டியன், உதவி செயற்பொறியாளர்கள் நித்யா, கண்ணன், முஸ்தபா, ராஜமாணிக்கம், இளநிலை பொறியாளர் ஆயிஷா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர் மற்றும் கருணாநிதி, பொறியாளர் தொட்லாமா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அருணாசலம், ஒன்றிய குழு துணை தலைவர் டி ஆர் ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் சுபாஷ் சந்திர போஸ், ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு, மாவட்ட தொண்டர் அணி தலைவர் ராமச்சந்திரன், மாவட்டக் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் அன்பழகன், ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் எஸ் சி விஜயகுமார், மாவட்ட பிரதிநிதி சிவலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன், துணை தலைவர் தீபா வெங்கடேசன், வார்டு உறுப்பினர்கள், உமா காந்தன், செல்வராஜ், ஆசிரியர் பிச்சாண்டி, சாம்ராஜ், சின்னபையன், ஞானவேல், திருமலைவாசன், வேங்கையன், மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/