மதுரை அண்ணா நகர் அருகே சாலையில் கழிவுநீர் பொங்குவது தடுக்கப்படுமா? - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

மதுரை அண்ணா நகர் அருகே சாலையில் கழிவுநீர் பொங்குவது தடுக்கப்படுமா?

மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் காதர் மொய்தீன் தெருவில் பல மாதங்களாக சாலையில் கழிவுநீர் பொங்கி, குளம் போல தேங்கியுள்ளது. மதுரை அண்ணா நகர் தாசில் நகரில் பல இடங்களில், கழிவுநீர் ஆனது சாலைகளில் குளம் போல தேங்கியுள்ளது. காதர் மைதீன் தெரு, வீரவாஞ்சி தெரு, அன்பு மலர் தெரு, ராஜராஜன் தெரு உள்ளிட்டு தெருக்களில், கழிவுநீர் வாய்க்காலில் நீர் பெருக்கெடுத்து, சாலையிலே குளம்போல தேங்கி, கொசு உற்பத்தியை ஏற்படுத்தும் மையமாக திகழ்கிறது.


இது குறித்து, இப்பகுதியில் குடியிருப்போர், மதுரை மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும், மதுரை தாசில்தார் நகர் காதர் மொய்தீன் தெருவில் தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என, இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், வீரவாஞ்சி தெருவில், பல இடங்களில் கழிவுநீர்கள் சாலையிலே பொங்கி மாசை ஏற்படுத்துகிறது. இதனால், சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர், இரவு நேரங்களில் தடுமாறி கீழே விழுகிற நிலை ஏற்படுகிறது.


மேலும், மழைக்காலங்களில் மருது பாண்டியர் தெருவில் ரைஸ் மில் அருகே நீரானது செல்ல வழி இல்லாமல் குளம் போல தேங்கியுள்ளன. ஆகவே, மதுரை மாநகராட்சி ஆணையாளர், மேயர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இப்பகுதி குடியிருப்போர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/