ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் முதலாமாண்டு நினைவு நாள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 செப்டம்பர், 2023

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் முதலாமாண்டு நினைவு நாள்.

 ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மேல்விஷாரம் நகரத்தில்
தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் முன்னிடு கீழ் விசாரம் குளத்து மேட்டில் இருந்து மேல்விஷாரம் தபால் நிலையம் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. 

சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர்  A.M.முனிரத்தினம் M.L.A சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்து பயணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார். வேலி நகர தலைவர், அப்துல் சுக்கூர் அனைவரையும் வரவேற்றார் நகரச் செயலாளர் வி.அழகேசன் நன்றி  கூறினார்.

மாவட்டத் துணைத் தலைவர் விநாயகம் சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் கே.ஒ.நிஷாத் அஹமத், மாணவர் காங்கிரஸ் மாநில செயலாளர் தருண் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநில செயலாளர் கே.பாஸ்கர் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை ஆற்காடு சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஆர்.கேசவன் மாநில பொதுக்குழு உறுப்பினர் திமிரி உமாமகேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

வட்டாரத் தலைவர்கள் ஆற்காடு கிழக்கு எஸ்.எம் வீரப்பா, ஆற்காடு வட்டாரம் மேற்கு தலைவர் எஸ். புஷ்பராஜ், வாலாஜா வட்டாரத் தலைவர் கே.கணேசன், நகரத் தலைவர்கள் ஆற்காடு பியாரே ஜான்,வாலாஜா மணி, ராணிப்பேட்டை ஆர்.கே குப்புசாமி, மாவட்ட துணைத் தலைவர் அமானுல்லா, பாகவி மற்றும் நகர வட்டார பேரூர் தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/