சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாற்றில் மிதந்த பெண் சடலம் இறப்பு பற்றி போலீசார் தீவிர விசாரணை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 செப்டம்பர், 2023

சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாற்றில் மிதந்த பெண் சடலம் இறப்பு பற்றி போலீசார் தீவிர விசாரணை.

சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாற்றில் மிதந்த பெண் சடலம் இறப்பு பற்றி போலீசார் தீவிர விசாரணை.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி வெள்ளாற்றுப் பகுதியில் பெண் சடலம் ஒன்று நீரில் மிதப்பதாக காவல்துறைக்கு வந்த செய்தியை அடுத்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கிடைத்த தகவலின் படி இறந்த பெண் பாப்பாகுடியை சேர்ந்த சூர்யா (40) என்ற பெயருடைய பெண்என்றும் அவர் சற்றே மனநிலை பாதித்துள்ளவர் என்றும் மனநிலை பாதித்த நிலையில் வீட்டில் உள்ளவர்கள் கவனிக்காத போது கால் போன போக்கில் நடந்து இப்பகுதிக்கு வந்துள்ளவர் என்றும் போலீசாரின் விசாரணையில்தெரியவந்துள்ளது. தண்ணீரில் மூழ்கி  பிரேதமாக மிதந்த அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/