சேலம் கோட்டை மாரியம்மன் மீது பச்சைக்கிளி அமர்ந்திருக்கின்ற அதிசய நிகழ்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

சேலம் கோட்டை மாரியம்மன் மீது பச்சைக்கிளி அமர்ந்திருக்கின்ற அதிசய நிகழ்வு.

சேலம் கோட்டை மாரியம்மன் ஆலயத்தில்  புதுப்பிக்கும் பணி  நடைபெற்று வருகிறது.தற்போது கோட்டை மாரியம்மன் சிரசு பிரபாவளி தலை மீது  பச்சைக்கிளி ஒன்று அமர்ந்திருக்கிறது. இது சித்தராக இருக்கலாம் அல்லது மதுரை மீனாட்சியாக இருக்கலாம் என கோவில் பூசாரிகள் பலர் தெரிவிக்கின்றனர். 

மாரியம்மனுக்கு வைக்கப்படும் தீர்த்தம் பிரசாதங்களை கிளி உண்டு கருவறை உள்ளேயே அம்மன் மீது  அமர்ந்திருக்கிறது கும்பாபிஷேக தேதி  நிர்ணயத்துடன் அருள் புரிய சேலம் ஸ்ரீ சுகனேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள கிளி முகம் கொண்ட ஸ்ரீ சுக பிரம்ம மகரிஷி தான் வந்துள்ளாரோ? என எண்ணி பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து வழிபட்டு ஆச்சரியத்துடன் செல்கின்றனர், இன்று வரை பச்சைக்கிளி அம்மன் மீது அமர்ந்து அருள் பாலித்து வருகிறது . ஏராளமான பக்தர்கள்  பார்த்து வழிபட்டு செல்கின்றனர்..


- சேலம் செய்தியாளர் வெங்கடேஷ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/