திராவிட முன்னேற்ற கழக பொறியாளர் அணி சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் பேச்சு போட்டி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 செப்டம்பர், 2023

திராவிட முன்னேற்ற கழக பொறியாளர் அணி சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் பேச்சு போட்டி.

மதுரை தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக பொறியாளர் அணி சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை ஆஸ்டின்பட்டியில் அமைந்துள்ள பிடிஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் மாணவர்களுக்கான மாநிலம் தழுவிய மாபெரும் பேச்சு போட்டி நடைபெற்றது.
 

இதில் முதல் பரிசு பத்தாயிரமும் இரண்டாம் பரிசு ஐந்தாயிரம் மூன்றாம் பரிசு 3000 என வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டது  இந்த நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார் மற்றும் மாநிலத் துணைச் செயலாளர் உமா காந்த் தெற்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சுரேஷ் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 


இதில் மாவட்ட அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஒன்றிய நகர பகுதி பேரூர் நிர்வாகிகள் வட்டம் வார்டு கிளைக் கழகம் சார்பணி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/