திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் "வந்தே பாரத் ரயில் " திண்டுக்கல்லில் இன்று வெள்ளோட்டம்
வந்தே பாரத் ரயிலை பாரத பிரதமர் தொடங்கி வைக்கிறார் திருநெல்வேலி டு சென்னை ..
திருநெல்வேலி - சென்னை இடையே 652கிலோமீட்டர் தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது.
1மணி நேரத்திற்கு தோராயமாக 83 கி.மீ தூரத்தை கடந்து செல்லும் இந்த ரயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
வந்தே பாரத் ரயில் செப்டம்பர் 24 தேதியில் இருந்து தனது பயணத்தை திருநெல்வேலியில் இருந்து தொடங்க உள்ளது.
இந்த ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதன் வெள்ளோட்டாமாக திண்டுக்கல் ரயில்வே ஜங்ஷனை கடந்து சென்ற தருணம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக