வேடசந்தூரில் நள்ளிரவில் சிக்னல் கம்பத்தில் மோதிவிட்டு டேங்கர் லாரி நிற்காமல் சென்றதால் பரபரப்பு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 செப்டம்பர், 2023

வேடசந்தூரில் நள்ளிரவில் சிக்னல் கம்பத்தில் மோதிவிட்டு டேங்கர் லாரி நிற்காமல் சென்றதால் பரபரப்பு


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு, நான்கு சாலை சந்திப்பில் உள்ள நாடக மேடை அருகே சிக்னல் போஸ்ட் ஒன்று இருந்தது.


இன்று நள்ளிரவு திண்டுக்கல் சாலை வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி ஒன்று திடீரென்று வேகமாக ரிவர்சில் வந்து 20 அடி உயரமுள்ள சிக்னல் போஸ்டின் மீது பயங்கரமாக மோதியது.


இதில் அந்த சிக்னல் போஸ்ட் முறிந்து சாலையில் விழுந்தது. 


மேலும் சிக்னல் போஸ்டில் கட்டி இருந்த கேபிள் வயர்கள் சாலையின் குறுக்கே அறுந்து விழுந்தன. 


அதிர்ஷ்டவசமாக அப்போது அந்த பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


சிக்னல் போஸ்ட் மீது மோதிய டேங்கர் லாரி அங்கிருந்து நிற்காமல் தப்பி சென்றது.


இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் அறுந்து கிடந்த கேபிள் வயர்களை அப்புறப்படுத்தினர்.


மேலும் சாலையில் முறிந்து விழுந்த சிக்னல் போஸ்ட்டை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் டேங்கர் லாரி மோதி சிக்னல் போஸ்ட் முறிந்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் வேடசந்தூர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/